லக்னோ:
உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த மாநிலம் முழுவதும் காவி நிறத்துக்கு மாறி வருகிறது.
ஏற்கனவே, மாநில அரசின் தலைமை செயலகம் காவிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பின்னர்ப ஸ்கள் அனைத்தும் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது கல்விக் கூடங்களுக்கும் காவி நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அனைத்து அரசு அலுவலகங்கள் உள்பட மாநிலத்தின் அனைத்து முக்கிய பகுதிகளும் காவி பூசப்பட்டு விடும் என தெரிகிறது.
உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சாமியாரான யோகி பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்துத்துவாக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிறுபான்மையினர் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உ.பி.யில் புதிய விடப்பட்ட பஸ்களை அனைத்தும் காவி நிறத்திலேயே இருந்தது. இது பலவாறாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், உ.பி. உமாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டு வருகிறது. இதுவரை மாநிலத்தில் 100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் இந்த செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில கிராமங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மாநில அரசு அதை கண்டுகொள்ளாமல் உ.பி. மாநிலத்தை காவி நிறமாக மாற்றுவதிலேயே குறியாக இருந்து வருகிறது.