டெல்லி

வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றைப் பெறும் வசதி ஏற்கனவே உள்ளது.

ஆயினும்  ‘ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதன் மூலம் யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.  ஆயினும், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும்.