போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 15ந்தேதி முதல்  கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. தொற்று பரவல் குறையத் தொடங்கியதால், சமீப நாட்களாக பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில்,   பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 15ம் தேதி முதல் 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் மீண்டும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வி அமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில்,  1,400 கல்லூரிகள் மற்றும் 56 பல்கலைக்கழகங்கள் 13.5 லட்சம் மாணவர்கள் படிப்பதாகவும்,  அதில் இரண்டு லட்சம் பேர் புதியவர்கள் எனவும் தெரிவித்த அமைச்சர் 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகளை தொடங்குவமாக  அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன்,  கல்லூரிகளுக்கு வரும், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.