அமைச்சரவை கூட்டம் (பைல் படம்)

டில்லி:

த்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் விலைஉயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 5 சதவிகிதம் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி மேலும் 2 சதவிகிதம் உயர்ந்து 7 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த ஆண்டு (2018) ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும்,  இதன் மூலம் சுமார் 1.1 கோடி பேர் பயன் பெறுவர் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.