சென்னை: சென்னையில் 6 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை  மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மகளிர் உரிமை தொகை பதிவு உள்பட அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதற்கட்டமாக மாநிலம் முழுவதும்  3,563 இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில்,  சென்​னை​யில் 6 இடங்​களில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் இன்று நடை​பெறுகின்​றன. இன்று ஜூலை 15, 2025 முதல் நவம்பர் 15, 2025 வரை, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 400 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் அரசின் பல்வேறு சேவைகளை எளிதாக பெறலாம்.
தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை அவர்​கள் வசிக்​கும் பகுதிக்கே சென்று வழங்​கும் வகை​யில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டடத்தின்படி,  சென்​னை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்கள் 6 இடங்​களில் நடை​பெறுகிறது. அதன்​படி,
  1. தண்​டை​யார்​பேட்டை பட்​டேல் நகர் பள்​ளி,
  2. சூளைமேடு கில் நகர் விளை​யாட்டு திடல்,
  3. பட்​டாளம் ஸ்டிராஹன்ஸ் சாலையில் உள்ள மாநக​ராட்சி மண்டல அலு​வல​கம்,
  4. மாதவரம் தபால் அலு​வல​கம் சாலை​யில் உள்ள எம்​.ஆர்​.பேலஸ்,
  5. அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள வேலம்​மாள் அரங்​கம்,
  6. சைதாப்​பேட்​டை​யில் உள்ள அன்னை வேளாங்​கண்ணி கல்​லூரி
ஆகிய 6 இடங்களில் இந்த முகாம்​கள் நடை​பெறுகின்​றன.
இவற்றை சென்னைவாசிகள் பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு அறிவுறுத்தப்பட்டுள்​ளது.