திருவனந்தபுரம்:

நாடாளுமன்ற தேர்தலில் இந்த அளவுக்கு தோல்வியை எதிர்பார்க்கவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவில் கேரள கம்யூனிஸ்டு கட்சியும், பாஜகவும்  படுதோல்வி அடைந்துள்ளது  மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பினராயி விஜயன், இந்த தோல்வி எதிர்பாராதது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பின்னடைவு குறித்து கட்சி விரிவாக மறு ஆய்வு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.