நியூயார்க்:
.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின.

இதை அடுத்து நியூயார்கில் ஐ.நா.சபையின் பொதுச்சபை கூட்டத்தில் அதற்கான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷ்யாவை நீக்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து 93 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்தை எதிர்த்து சீனா, பெலாரஸ், ஈரான், சிரியா உள்ளிட்ட 24 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட 58 நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானத்திற்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் ஐ.நா.மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.