பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடும் இந்திய அணியில், ஒரேசமயத்தில் 2 தமிழ்நாட்டு பவுலர்கள் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளாக பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாத நிலையில், அவரின் இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றையப் போட்டியில் அஸ்வின் எப்படியும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் பெரிதாகி எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாகிவிடும் என்ற நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளார்.

‍அதேசமயம், இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் இடத்திற்கு வேகப்பந்து வீச்சாளராக தமிழ்நாட்டின் நடராஜன் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதனால், இந்திய அணியில் ஒரேநேரத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பவுலர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.