டில்லி,

மிழகத்தில் இந்த மாதம் 7ந்தேதி மற்றும் 12ந்தேதிகளில் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது.

புயல் காரணமாக அதிக அளவில் மழை மற்றும் சூறைக்காற்று ஏற்படும் என்றும், தமிழகம் பலத்த சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்மேற்கு பருவமழையின்போது வழக்கத்திற்கு மாறாக அதிக மழை பெய்துள்ளது. இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அவ்வப்போது சிறிய மற்றும் பெரிய அளவிலான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 3 நாட்கள் மிதமான மழை முதல் கனமழை வரை இருக்கும் என தமிழக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், டில்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வர இருக்கும் வடகிழக்கு பருவ மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு (2016) வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இயல்பை விட 62 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால் நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவியது.

இதில்  மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்தது. இதன் காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த இந்த வார இறுதியில் வட கிழக்கு பருவ மழை தொடங்குகிறது. அதன் காரணமாக  வரும் 7 மற்றும் 12-ம் தேதிகளில் வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நல்ல மழை இருக்கும் என்றும் 7ந்தேதி உருவாகும் புயல் 11ந்தேதி வரை நீடித்து கரையை கடக்கும் என்றும், 12ந்தேதி உருவாகும் புயல் காரணமாக ஒருவாரம் மழை நீடிக்கும் என்றும் அந்த புயல் 20ந்தேதிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த இரு புயல்களும் கடலூருக்கும், ஆந்திரா மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கரையை கடக்கும். அதன் காரணமாக  பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் அதிகமான அளவில் சேதம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் வழக்கத்தைவிட 111 சதவிகித அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,  இதன் காரணமாக தமிழகம் பெரும் பாதிப்புக்கு ஆளாகலாம் என்று  கூறியுள்ளது.

இந்த ஆண்டு தமிகத்தில் வடகிழக்கு பருவ மழை வருகிற 26-ம் தேதி தொடங்கும் என்றும் வழக்கமான அளவுக்கு மழை பெய்யும் என்றும் மத்திய மற்றும் தென் தமிழ் நாட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.