டோக்கியோ

டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

 

கொரோனா பரவல் உலகெங்கும் மீண்டும் அதிகரித்து வருகிறது.    கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன.  இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என அறிவித்த ஜப்பான் அரசு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.

உலகெங்கும் இருந்து இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் டோக்கியோ வந்துள்ளனர்.   இவர்கள் அனைவரும் டோக்கியோவில் அமைக்கபட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு கொரோன பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதையொட்டி அங்கு நடந்த சோதனையில் இரு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது டோக்கியோவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது,