லக்கிம்பூர் கெரி:
த்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. இவர் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தனது வாகனத்தில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் விளைவாக இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.