டெல்லி: மூன்று தேர்தல் ஆணையர்கள் கொண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில், 2 பேர் பதவி இடங்களில் காலியாக உள்ள நிலையில், அந்த இடத்துக்கான நபரை தேர்வு செய்வது தொடர்பாக வரும் 15ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்திய மக்களவை தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், விரைவில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும் மும்முரமாக செய்து வருகின்றன.

இநத் நிலையில், திடீரென இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான  அருண் கோயல் பதவியை ராஜினாமா செய்தார். 2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென  அருண் கோயல் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.  3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு பதவி காலியாக இருந்த நிலையில், அருண்கோயல் பதவி விலகல் காரணமாக 2 ஆணைர் பதவிகள் காலியாக உள்ளது. இதனால், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய இந்திய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினமே, அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு மற்றும் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப இரண்டு தேர்தல் ஆணையர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் குழு அறிவிப்பதற்கு முன்பே கோயல் ராஜினாமா செய்தார், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையத்தின் ஒரே உறுப்பினராக விட்டுவிட்டார்.

இதைத்தொடர்ந்த, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான ஒரு தேடல் குழு, இரண்டு பதவிகளுக்கும் தலா ஐந்து பெயர்களைக் கொண்ட இரண்டு தனித்தனி பேனல்களைத் தயாரிக்கும்.

பின்னர், பிரதமர் தலைமையில் ஒரு மத்திய அமைச்சரும், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இரண்டு நபர்களை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கும்.

தேர்தல் ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள். உறுப்பினர்களின் வசதியைப் பொறுத்து தேர்வுக் குழு மார்ச் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் கூடும் என்றும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் நியமனங்கள் நடைபெறும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

CEC மற்றும் EC நியமனம் குறித்த புதிய சட்டம் சமீபத்தில் அமலுக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் கமிஷனர்கள் அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர் மற்றும் வழக்கப்படி, மூத்தவர் CEC ஆக நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் 324 வது பிரிவின் பிரிவு 2, தேர்தல் ஆணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் குடியரசுத் தலைவர் அவ்வப்போது நிர்ணயம் செய்யக்கூடிய மற்ற தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும்.