பிரபல சமூக வலைதளமான டிவிட்டர், தனது பணியாளர்கள் விட்டில் இருந்தே பணி செய்யலாம் என்று அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று  உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே  ஃபேஸ்புக், கூகுளின் அல்பபெட், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற முன்னணி  நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதி வரை,  ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என அறிவித்துள்ளன.
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களும் இனி எப்போதும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்த  டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி செவ்வாயன்று (12/05/2020)  தனது நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.
அதில், கொரோனா வைரஸ் தொற்று பூட்டுதல் கடந்த பின்னரும் கூட,  ஊழியர்கள் வீட்டிலிருந்து நிரந்தரமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று  தெரிவித்து உள்ளார்.
மேலும், சேவையகங்களை பராமரிப்பது போன்ற  சில அத்தியாவசிய வேலைகளுக்கு ஊழியர்கள் வர வேண்டியிருக்கும் என்று கூறியுள்ள ஜாக்,  நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், எங்கள் ஊழியர்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் தொடர்ந்து முதலிடம் கொடுப்போம்.” அலுவலகம் வராமல் வேலை செய்தாலும் அவர்களுக்கு வழக்கமான ஊதியமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வரும்  செப்டம்பர் மாதம் முதல் சில நாடுகளில் உள்ள தங்களது  அலுவலகத்தை திறக்க டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.