Skip to content
  • Mon. Jul 13th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

யானைகவுனி 3 பேர் சுட்டுக்கொலை: விசாரணைக்கு அழைத்த தலில்சந்த் உறவினர் விஜயகுமார் தற்கொலை

Nov 24, 2020
சென்னை:  சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யானைக்கவுனி அருகே உள்ள சவுக்கார்பேட்டை துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக,  உயிரிழந்த தலித்சந்தின் உறவினர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 சென்னை சவுகார்பேட்டையில் வசித்து வந்த தலில் சந்த், மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 3 பேரையும் சுட்டுக்கொன்றது,  தலில் சந்தின் மருமகள் ஜெயமாலா, அவரின் சகோதரா் கைலாஷ், விகாஸ், அவா்களது கூட்டாளிகளான ரவீந்திரநாத், விஜய் உத்தம் கமல், ராஜ் ஷிண்டே என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்போது, அவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து உதவியதாக   ராணுவ வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே  என்பது தெரிய வந்தது.  மேலும்,  இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், மருமகள் ஜெயமாலாவிற்கு மாமனால் தலித்சந்த் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, இறந்த  தலில் சந்த் என்பவரின் உறவினர் விஜயகுமார் விசாரணைக்கு வரும்படி, யானைக்கவுனி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இநத் நிலையில்,  விஜயகுமார்  திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில்  குடியிருந்து வரும் அவர், அங்குள்ள 5 -வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Post navigation

நிவர் புயல்: சென்னை, புதுச்சேரி உள்பட 9 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறது அசாதுதின் ஓவைசி கட்சி…. திராவிட கட்சிகள் கலக்கம்…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer