திருவனந்தபுரம்:
பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.  அவருக்கு வயது 54.
நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி உள்ள தம்பனூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சில நிதி பிரச்சினைகள் இருந்ததால் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கடுமையான நிதி நெருக்கடியை இருந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரமேஷ் வலியசாலா கடந்த 22 ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
நாடகக் கலைஞராக தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கிய ரமேஷ் வலியசாலா, தனது பள்ளிப்படிப்பை அரசு மாதிரிப் பள்ளியிலும், பட்டப்படிப்பைத் திருவனந்தபுரம் கலைக் கல்லூரியிலும் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.