லக்னோ:

நாடு முழுவதும் இன்று 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கு முதல் கட்டமாக  வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 8 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புடன் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், கய்ரானா பகுதியில் உள்ள ரசூல்புர் வாக்குச்சாவடியில், அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வாக்களிக்க வந்தார். அவரை  காவல்துறையினர் உள்ளே விட மறுத்து  வெளியே அனுப்பினர்.

இதையடுத்து காவல்துறையினர் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தி  வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றது. இதையடுத்து காவல்துறையினர் வானத்தைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்குச்சாவடியை கைப்பற்ற வந்தவர் பெயர் சவுரவ் திரிவேதி (Saurav Trivedi) என்றும் அவர் முன்னாள் பாஜக எம்எல்சி என்பதும்தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.