டில்லி

டில்லியில் கனமழை பெய்ததால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்தியாவில் தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இரவு டில்லியில் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாகக் காற்று மாசு சற்று குறைந்துள்ளது. ஆனால் கனமழை காரணமாக டெல்லியில் விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் டில்லிக்கு வரவேண்டிய 16 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் போன்ற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் அவதியை உண்டாக்கி உள்ளது.