ராமநாதபுரம்

பாஜகவின் பாதயாத்திரையால் ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முதல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்திவருகிறார். நேற்று இந்த யாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கிவைத்தார்.

ராமநாதபுரத்தில் தற்போது பாதயாத்திரை நடைபெறுகிறது.  ராமநாதபுரத்தில், அண்ணாமலையின் பாதயாத்திரை காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது முருகன் கோவில் முதல் கேணிக்கரை வழியாகச் செல்லும் வாகனங்கள், ஈசிஆர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.