சென்னை
பரங்கிமலைப் பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக்கா கருத்தில் கொண்டு பரங்கிமலை பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் இன்று (21.02.2024) முதல் ஒரு வாரக் காலத்திற்குச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.கே.என் ரோடு மற்றும் ரயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கிச் செல்ல அனுமதி இல்லை.
ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் செல்வதற்கு வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ செல்லலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.