டெல்லி: சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல் கிட் வழக்கில் சுற்றுச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கடந்த 13ம் தேதி பெங்களூருவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

அவரது கைதுக்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. திஷா ரவியின் நீதிமன்றக் காவல் நேற்று மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி திஷா ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார்.  மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது. வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.