சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாலை திடீரென மாற்றங்களை செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த இலாக்கா கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
aa
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்ஜமினிடம் , ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த ஊரகத் தொழில் துறை ஒப்படைக்கப்பட்டது.
மேலும் புதிய அமைச்சராக மாஃபா பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.
பதவியேற்பு நிகழ்ச்சி நாளை மாலை 4-45மணியளவில்  ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.