சென்னை

நாளை வார இறுதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இதன்படி வழக்கான வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை வார இறுதி நாட்களையொட்டி தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதில் சென்னையில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகள், மற்ற இடங்களில் இருந்து கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தவிர ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை வரும் மக்களுக்காக அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.