பிரிட்டன்:
ந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘லான்செட்’ மருத்துவ ஆய்வு இதழில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும், கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளுக்கும், ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.