டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில்  தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியா இன்று ஒரே நாளில் 2 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நடைபெற்று வருகிறது.  இநத போட்டிகளில் 1 இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இன்று ஒரே நாளில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி, தற்போது மேலும் ஒரு தங்கத்தை தட்டிவந்துள்ளது.

ஈட்டி எறிதலில் பங்கேற்ற சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் 68.08 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் 2020ல் இந்தியாவுக்கு அடுத்த தங்கம் கிடைத்துள்ளது.

 ஈட்டி எறிதலில் பங்கேற்ற இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார். இவர்  68.08 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் 2020ல் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்லது.

ஆண்கள் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். மேலும், யோகேஷ் கத்துனியா, தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார்ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். வட்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்த வினோத் குமாரின் பதக்கம் பறிக்கப்பட்டதால் ஏழாக இருந்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஆறாக குறைந்தத. இந்த நிலையில் மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மூலம் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்த சூழலில் தற்போது பாராலிம்பிக்கிலும் ஈட்டி எறிதலில் தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.