வரலாற்றில் இன்று 19.10.2016
அக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1216 – இங்கிலாந்தின் ஜோன் மன்னன் இறக்க, அவனது ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான்.
1453 – பிரெஞ்சு போர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
1469 – அரகன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் ஸ்பெயின் நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.
1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.
1813 – ஜெர்மனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவுக்கு வந்தது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.
1912 – லிபியாவின் திரிப்பொலி நகரை இத்தாலியப் படைகள் ஒட்டோமான் பேரரசிடம் இருந்து கைப்பற்றினர்.
1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
1943- காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.
1950 – சீன இராணுவம் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.
1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.
1960 – ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.
1974 – நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.
1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.
1983 – கிரெனாடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிஷொப் படுகொலை செய்யப்பட்டார்.
1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.
1991 – வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக 2000 பேர்வரை இறந்தனர்.
2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிருபர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.
2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்குத் தொடங்கியது.
2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.
பிறப்புக்கள்

1888 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (இ. 1972)

1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1995)
1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர்
1946 – ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)
இறப்புகள்
1937 – எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு, நியூசிலாந்து இயற்பியல் அறிஞர் (பி. 1871)
 2000 – நிமலராஜன், பிபிசியின் யாழ்ப்பாண நிருபர்
2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)
சிறப்பு நாள்
அல்பேனியா: அன்னை தெரேசா நாள்
நியுயே: அரசியலமைப்பு நாள் (1974இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை)