சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 212 பேரும் கோவையில் 201 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,591 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,37,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,217 பேர் உயிர் இழந்து 25,85,244 பேர் குணம் அடைந்து தற்போது 16,549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,46,646 பேர் பாதிக்கப்பட்டு 8,435 பேர் உயிர் இழந்து 5,36,421 பேர் குணம் அடைந்து தற்போது 1,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 201 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,39,177 பேர் பாதிக்கப்பட்டு 2,302 பேர் உயிர் இழந்து 2,34,678 பேர் குணம் அடைந்து தற்போது 2,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,934 பேர் பாதிக்கப்பட்டு 2,450 பேர் உயிர் இழந்து 1,63,340 பேர் குணம் அடைந்து தற்போது 1,144 பேர் சிகிச்சையில் உள்ளனர்.