சென்னை

மிழகத்தில்  இன்றைய (15/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 33,658 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,65,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 17,359 பேர் உயிர் இழந்து 13,39,887 பேர் குணம் அடைந்து தற்போது 2,07,789 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,32,344 பேர் பாதிக்கப்பட்டு 5,703 பேர் உயிர் இழந்து 3,80,274 பேர் குணம் அடைந்து தற்போது 46,367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,12,358 பேர் பாதிக்கப்பட்டு 857 பேர் உயிர் இழந்து 91,328 பேர் குணம் அடைந்து தற்போது 20,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,11,295 பேர் பாதிக்கப்பட்டு 1,198 பேர் உயிர் இழந்து 94,836 பேர் குணம் அடைந்து தற்போது 13,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.