சென்னை

மிழகத்தில்  இன்றைய (22/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 12,652 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,37,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 13,317 பேர் உயிர் இழந்து 9,34,966 பேர் குணம் அடைந்து தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 3,789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,97,814 பேர் பாதிக்கப்பட்டு 4,474 பேர் உயிர் இழந்து 2,62,939 பேர் குணம் அடைந்து தற்போது 30,401 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 70,437 பேர் பாதிக்கப்பட்டு 885 பேர் உயிர் இழந்து 61,602 பேர் குணம் அடைந்து தற்போது 7,950 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 70,262 பேர் பாதிக்கப்பட்டு 710 பேர் உயிர் இழந்து 64,202 பேர் குணம் அடைந்து தற்போது 5,350 பேர் சிகிச்சையில் உள்ளனர்.