சென்னை

மிழகத்தில்  இன்றைய (19/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,087 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,64,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,582 பேர் உயிர் இழந்து 8,45,178 பேர் குணம் அடைந்து தற்போது 6,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,40,671 பேர் பாதிக்கப்பட்டு 4,194 பேர் உயிர் இழந்து 2,33,925 பேர் குணம் அடைந்து தற்போது 2,552 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 56,917 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,641 பேர் குணம் அடைந்து தற்போது 590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,063 பேர் பாதிக்கப்பட்டு 799 பேர் உயிர் இழந்து 52,679 பேர் குணம் அடைந்து தற்போது 585 பேர் சிகிச்சையில் உள்ளனர்.