சென்னை

மிழகத்தில்  இன்றைய (05/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 23,310 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,72,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,779 பேர் உயிர் இழந்து 11,29,512 பேர் குணம் அடைந்து தற்போது 1,28,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,64,081 பேர் பாதிக்கப்பட்டு 4,952 பேர் உயிர் இழந்து 3,26,212 பேர் குணம் அடைந்து தற்போது 32,917 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 88,192 பேர் பாதிக்கப்பட்டு 997 பேர் உயிர் இழந்து 76,849 பேர் குணம் அடைந்து தற்போது 10,346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 86,261 பேர் பாதிக்கப்பட்டு 736 பேர் உயிர் இழந்து 76,206 பேர் குணம் அடைந்து தற்போது 9,319 பேர் சிகிச்சையில் உள்ளனர்.