சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 148 பேரும் கோவையில் 141 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,90,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,948 பேர் உயிர் இழந்து 26,40,627 பேர் குணம் அடைந்து தற்போது 14,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,53,221 பேர் பாதிக்கப்பட்டு 8,531 பேர் உயிர் இழந்து 5,42,939 பேர் குணம் அடைந்து தற்போது 1,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 141 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,45,321 பேர் பாதிக்கப்பட்டு 2,390 பேர் உயிர் இழந்து 2,41,479 பேர் குணம் அடைந்து தற்போது 1,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,741 பேர் பாதிக்கப்பட்டு 2,494 பேர் உயிர் இழந்து 1,67,191 பேர் குணம் அடைந்து தற்போது 1,056 பேர் சிகிச்சையில் உள்ளனர்.