சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 156 பேரும் கோவையில் 132 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,87,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,899 பேர் உயிர் இழந்து 26,36,379 பேர் குணம் அடைந்து தற்போது 14,814 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,52,773 பேர் பாதிக்கப்பட்டு 8,526 பேர் உயிர் இழந்து 5,42,453 பேர் குணம் அடைந்து தற்போது 1,794 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 132 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,44,968 பேர் பாதிக்கப்பட்டு 2,382 பேர் உயிர் இழந்து 2,41,034 பேர் குணம் அடைந்து தற்போது 1,552 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,479 பேர் பாதிக்கப்பட்டு 2,491 பேர் உயிர் இழந்து 1,66,900 பேர் குணம் அடைந்து தற்போது 1,088 பேர் சிகிச்சையில் உள்ளனர்.