சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 396 பேரும் கோவையில் 793 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 6,596 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,43,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 31,746 பேர் உயிர் இழந்து 23,58,785 பேர் குணம் அடைந்து தற்போது 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 396 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,30,432 பேர் பாதிக்கப்பட்டு 8,115 பேர் உயிர் இழந்து 5,18,870 பேர் குணம் அடைந்து தற்போது 3,447 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 793 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 686 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,15,051 பேர் பாதிக்கப்பட்டு 1,956 பேர் உயிர் இழந்து 2,05,441 பேர் குணம் அடைந்து தற்போது 7,654 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,54,994 பேர் பாதிக்கப்பட்டு 2,326 பேர் உயிர் இழந்து 1,50,643 பேர் குணம் அடைந்து தற்போது 2,025 பேர் சிகிச்சையில் உள்ளனர்.