சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 183 பேரும் கோவையில் 176 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,612 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,63,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,578 பேர் உயிர் இழந்து 26,11,061 பேர் குணம் அடைந்து தற்போது 17,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,49,827 பேர் பாதிக்கப்பட்டு 8,482 பேர் உயிர் இழந்து 5,39,375 பேர் குணம் அடைந்து தற்போது 1,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 176 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,42,491 பேர் பாதிக்கப்பட்டு 2,340 பேர் உயிர் இழந்து 2,38,114 பேர் குணம் அடைந்து தற்போது 2,038 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,68,768 பேர் பாதிக்கப்பட்டு 2,472 பேர் உயிர் இழந்து 1,65,200 பேர் குணம் அடைந்து தற்போது 1,096 பேர் சிகிச்சையில் உள்ளனர்.