சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 185 பேரும் கோவையில் 204 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,580 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,35,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,190 பேர் உயிர் இழந்து 25,83,707 பேர் குணம் அடைந்து தற்போது 16,522 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,46,434 பேர் பாதிக்கப்பட்டு 8,433 பேர் உயிர் இழந்து 5,36,249 பேர் குணம் அடைந்து தற்போது 1,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 204 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,38,976 பேர் பாதிக்கப்பட்டு 2,297 பேர் உயிர் இழந்து 2,34,487 பேர் குணம் அடைந்து தற்போது 2,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,818 பேர் பாதிக்கப்பட்டு 2,450 பேர் உயிர் இழந்து 1,63,248 பேர் குணம் அடைந்து தற்போது 1,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.