சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 174 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,631 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,30,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,119 பேர் உயிர் இழந்து 25,79,169 பேர் குணம் அடைந்து தற்போது 16,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,45,882 பேர் பாதிக்கப்பட்டு 8,421 பேர் உயிர் இழந்து 5,35,663 பேர் குணம் அடைந்து தற்போது 1,798 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 235 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,38,325 பேர் பாதிக்கப்பட்டு 2,293 பேர் உயிர் இழந்து 2,33,860 பேர் குணம் அடைந்து தற்போது 2,172 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,482 பேர் பாதிக்கப்பட்டு 2,442 பேர் உயிர் இழந்து 1,62,924 பேர் குணம் அடைந்து தற்போது 1,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.