சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 455 பேரும் கோவையில் 904 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,22,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 31,197 பேர் உயிர் இழந்து 23,21,928 பேர் குணம் அடைந்து தற்போது 69,372 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,29,211 பேர் பாதிக்கப்பட்டு 8,046 பேர் உயிர் இழந்து 5,19,849 பேர் குணம் அடைந்து தற்போது 1,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 904 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 870 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,12,493 பேர் பாதிக்கப்பட்டு 1,888 பேர் உயிர் இழந்து 1,99,803 பேர் குணம் அடைந்து தற்போது 10,802 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,54,118 பேர் பாதிக்கப்பட்டு 2,307 பேர் உயிர் இழந்து 1,49,996 பேர் குணம் அடைந்து தற்போது 1,815 பேர் சிகிச்சையில் உள்ளனர்.