சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 492 பேரும் கோவையில் 1,089 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 8,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,06,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 30,835 பேர் உயிர் இழந்து 22,86,653 பேர் குணம் அடைந்து தற்போது 89,009 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,28,322 பேர் பாதிக்கப்பட்டு 8,001 பேர் உயிர் இழந்து 5,16,961 பேர் குணம் அடைந்து தற்போது 3,360 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்றும் இங்கு 1,089 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 964 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,10,573 பேர் பாதிக்கப்பட்டு 1,854 பேர் உயிர் இழந்து 1,97,075 பேர் குணம் அடைந்து தற்போது 11,644 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் கோவை முதல் இடத்தில் உள்ளது.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,53,451 பேர் பாதிக்கப்பட்டு 2,294 பேர் உயிர் இழந்து 1,49,208 பேர் குணம் அடைந்து தற்போது 1,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.