சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 164 பேரும் கோவையில் 179 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,756 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,53,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,995 பேர் உயிர் இழந்து 24,98,289 பேர் குணம் அடைந்து தற்போது 21,521 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,37,546 பேர் பாதிக்கப்பட்டு 8,315 பேர் உயிர் இழந்து 5,27,757 பேர் குணம் அடைந்து தற்போது 1,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 179 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,28,685 பேர் பாதிக்கப்பட்டு 2,169 பேர் உயிர் இழந்து 2,24,599 பேர் குணம் அடைந்து தற்போது 1,917 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,61,623 பேர் பாதிக்கப்பட்டு 2,400 பேர் உயிர் இழந்து 1,58,102 பேர் குணம் அடைந்து தற்போது 1,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.