சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 147 பேரும் கோவையில் 209 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,971 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,37,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,752 பேர் உயிர் இழந்து 24,76,339 பேர் குணம் அடைந்து தற்போது 27,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,36,351 பேர் பாதிக்கப்பட்டு 8,299 பேர் உயிர் இழந்து 5,26,369 பேர் குணம் அடைந்து தற்போது 1,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 209 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,27,079 பேர் பாதிக்கப்பட்டு 2,135 பேர் உயிர் இழந்து 2,22,167 பேர் குணம் அடைந்து தற்போது 2,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,60,607 பேர் பாதிக்கப்பட்டு 2,386 பேர் உயிர் இழந்து 1,56,987 பேர் குணம் அடைந்து தற்போது 1,234 பேர் சிகிச்சையில் உள்ளனர்.