சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 252 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 2,312 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,31,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,652 பேர் உயிர் இழந்து 24,68,236 பேர் குணம் அடைந்து தற்போது 29,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,35,902 பேர் பாதிக்கப்பட்டு 8,286 பேர் உயிர் இழந்து 5,25,977 பேர் குணம் அடைந்து தற்போது 1,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 252 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,26,404 பேர் பாதிக்கப்பட்டு 2,126 பேர் உயிர் இழந்து 2,20,994 பேர் குணம் அடைந்து தற்போது 3,284 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,60,119 பேர் பாதிக்கப்பட்டு 2,384 பேர் உயிர் இழந்து 1,56,638 பேர் குணம் அடைந்து தற்போது 1,097 பேர் சிகிச்சையில் உள்ளனர்.