சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 214 பேரும் கோவையில் 436 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3,715 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,059 பேர் உயிர் இழந்து 24,31,017 பேர் குணம் அடைந்து தற்போது 33,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 214 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,33,637 பேர் பாதிக்கப்பட்டு 8,227 பேர் உயிர் இழந்து 5,23,473 பேர் குணம் அடைந்து தற்போது 1,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 436 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 330 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,21,020 பேர் பாதிக்கப்பட்டு 2,076 பேர் உயிர் இழந்து 2,16,952 பேர் குணம் அடைந்து தற்போது 2,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,57,847 பேர் பாதிக்கப்பட்டு 2,368 பேர் உயிர் இழந்து 1,53,802 பேர் குணம் அடைந்து தற்போது 1,677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.