சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 222 பேரும் கோவையில் 445 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 3,867 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,96,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 33,005 பேர் உயிர் இழந்து 24,18,882 பேர் குணம் அடைந்து தற்போது 35,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 222 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,33,432 பேர் பாதிக்கப்பட்டு 8,222 பேர் உயிர் இழந்து 5,23,042 பேர் குணம் அடைந்து தற்போது 2,168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 445 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும்  இரண்டாம் இடத்தில் 349 ஆக ஈரோடு மாவட்டம் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,21,415 பேர் பாதிக்கப்பட்டு 2,069 பேர் உயிர் இழந்து 2,16,495 பேர் குணம் அடைந்து தற்போது 3,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,57,655 பேர் பாதிக்கப்பட்டு 2,366 பேர் உயிர் இழந்து 1,53,629 பேர் குணம் அடைந்து தற்போது 1,660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.