மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,558, டில்லியில் 399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,69,114 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,302 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 18,63,702 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 54,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 6,29,282 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 10,654 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 602 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 6,16,054 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 3,468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.