சபரிமலை

மாத பூஜைகளுக்காக இன்று திறக்கபடும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு முன்பதிவு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் 5 நாட்கள் மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கமாகும்.   ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இன்று மாலை 5 மணிக்கு மலையாள கர்க்கடக (தமிழ் ஆடி) மாத பூகைகளுக்காக கோவில் நடை திறக்கப்படுகிறது.  இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.  அதற்கு இணையம் மூலம் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.  தினசரி 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  இந்த அனுமதியை 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் 48 மணி நேரத்துக்குள்ளான சோதனையில் நெகடிவ் உள்ளவர்கள் மட்டுமே பெற முடியும்.