சென்னை

ன்று பிரபல நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவல் காரணமாக கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முதல் கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்கள்,  மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்குத் தடுப்பூசி ஜனவரி 16 முதல் போடபட்டது.

இரண்டாம் கட்டமாக மார்ச் 1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் கோரோனா தடுப்பூசி போடப்பட்டது.  ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   மே 1 முதல் 18 வயதை தாண்டிய அனைவருக்கும்  தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்  கொண்டுள்ளார்.  இந்த விவரம் குறித்து அவர் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் “நமது தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.  நான் கொரோனாவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடி வெல்வோம்” எனப் பதிந்துள்ளார்.