டில்லி

ன்று ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினையை முன்வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. அங்கு கடந்த 50 தினங்களாக அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இங்கு கலவரத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும் அது எவ்வித பலனும் அளிக்கவில்லை.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் நிலைமை குறித்து கடந்த 24 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.  அமித்ஷா அப்போது  எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் நேற்று முன்தினம் எடுத்துரைத்தார்.

இன்று இரண்டு நாள் பயணமாக  மற்றும் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலம் செல்ல உள்ளார். அவர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அவர் இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளையும் சந்தித்து பேச உள்ளார்.