பாரு

ன்று நடைபெறும் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் மாக்னல் கார்ல்சென் மோதுகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பாரு நகரில் 10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் நடந்து வருகிறது. அரை இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார்.  இந்த அரை இறுதி சுற்று இரு ஆட்டங்கள் கொண்டது.

இந்த இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. இந்த  அதிவேகமாகக் காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும்.

முதல் 2 ஆட்டம் டிரா ஆகி 3-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுரியமாகச் செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் எதிராளியை அடக்கி அசத்தினார். கடைசி ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரக்ஞானந்தா 3½-2½ என்ற புள்ளி கணக்கில் பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

சென்னையின் 18 வயதான பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஆண்டு டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற 3-வது இளம் வீரர் ஆவார். இந்த கேன்டிடேட் போட்டியில் வெற்றி பெறும் வீரர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்.

இன்று பிரக்ஞானந்தா இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதுகிறார். இந்த இறுதிச்சுற்றும் இரு ஆட்டங்களைக் கொண்டது. இதில் சமன் ஆனால் டைபிரேக்கருக்கு நகரும்.