புதுச்சேரி

ன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.

அவ்வகையில் இன்று காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம், புதுச்சேரியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்  இன்று காலை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றுகிறார்.

பிறகு கடலூா் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நெய்வேலியில் அவர் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பின் விழுப்புரத்தில் வி.சி.க சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து வானூா் கோட்டக்குப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே பிரசாரம் செய்கிறார்.