திருவனந்தபுரம்

ன்று கேரளாவின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் கேரளீயம் 2023′ திருவிழா தொடங்கி உள்ளது.

கேரள மாநிலத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சி கருதப்படுகிறது. இன்று முதல் 7 ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கேரள மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரம் நடைபெற உள்ளது இந்த விழாவைக் கேரள முதல்வ பினராயி விஜயன் இன்று துவக்கி வைத்தார். இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் நடிகர் கமல்ஹாசன் மலையாள திரையுலகின் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் கலந்து கொண்டுள்ளனர். மூவரும் ஒன்று போலப் பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது.

இன்று தொடங்கி உள்ள ‘கேரளீயம் 2023’ நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், கண்காட்சி, உணவு திருவிழா எனப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் ஒரு வாரக் காலத்திற்கு இந்த திருவிழா நடைபெற உள்ளது.